செங்கோட்டையன் நீக்கம்: அதிமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?

Share

அதிமுக தலைமைக்கு கடந்த செப்டெம்பர் 5ஆம் தேதியன்று கெடு விதித்தார் செங்கோட்டையன்.
படக்குறிப்பு, அதிமுக தலைமைக்கு கடந்த செப்டெம்பர் 5ஆம் தேதியன்று கெடு விதித்தார் செங்கோட்டையன்.

பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க கடந்த செப்டெம்பர் 5ம் தேதியன்று கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதற்கு மறுநாளே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, செங்கோட்டையன் தரப்பில் பதில் நடவடிக்கை பற்றி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அவருடைய எதிர்ப்பும், நீக்கமும் கொங்கு மண்டலத்திலும் தமிழக அளவிலும் அதிமுகவுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமென்ற கேள்வி எழுந்துள்ளது.

செங்கோட்டையனால் பெரியளவில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்த முடியாவிட்டாலும், அவர் எழுப்பும் கேள்வி நிச்சயமாக கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஷ்யாம்.

செங்கோட்டையனின் கருத்து, சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு மட்டுமின்றி, கூட்டணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் பாஜக மாநில நிர்வாகி நாகராஜ். ஆனால் கட்சியில் பொதுச்செயலாளரின் முடிவே இறுதியானது என்றும், செங்கோட்டையனால் ஈரோடு மாவட்டத்தில் கூட எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்றும் அதிமுக நிர்வாகிகள் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com