சேச்சி கற்றுத் தந்த புடலங்காய் பொரியல் செய்முறையைப் பார்ப்போமா!
பாபநாசம் புடலங்காய் பொரியல்
தேவையான பொருள்கள்:
புடலங்காய் – 2
தேங்காய்த் துருவல் – அரை கப்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3
பூண்டுப் பற்கள் – 3
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
ஸ்டெப் 1
புடலங்காயைக் கழுவிய பின் பாதியாக நறுக்கி நடுவில் உள்ள சதைப் பற்றுள்ள பகுதியை நீக்கிவிட வேண்டும். பிறகு, மெலிதாக பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஸ்டெப் 2
தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 3
வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள புடலங்காயை சேர்த்து வதக்கவும்.
ஸ்டெப் 4
புடலங்காய் சிறிது நேரம் வதங்கியதும் சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து மிதமான சூட்டில் வேகவைக்கவும். நடுவே திறந்து கிளறி விடவும்.
ஸ்டெப் 5
புடலங்காய் வெந்ததும் தேவையான அளவு உப்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது மற்றும் கிள்ளிய கறிவேப்பிலை சேர்த்து நன்றாகப் பிரட்டி, சீரகத்தின் பச்சை வாசனை போகும் வரை சில நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
My Vikatan -இல் இதுவரை வெளியான விருந்தோம்பல் சிறப்பு ரெசிப்பி வீடியோக்களை இங்கே https://bit.ly/3Op3QQ2 காணலாம்.
இந்த புடலங்காய் பொரியலை நீங்கள் அப்படியே சாலட் போலவும் சாப்பிடலாம். அந்த அளவுக்கு அதிக சுவையாக இருக்கும். நீங்களும் இதேபோல செய்து ருசித்து பாருங்கள். அடுத்து மற்றும் ஒர் அறுசுவை அனுபவ உணவோடு சந்திப்போம்!