இந்திய மாநிலத்தில் புறாக்களுக்கு உணவளிக்க விதிக்கப்பட்ட தடை கடும் மோதலை தூண்டியுள்ளது ஏன்?

Share

ஏராளமான புறாக்கள் உணவு உண்ணும் பின்னணியில் ஒரு மாணவி மூக்கை மூடிக்கொண்டு செல்லும் காட்சி
மும்பையில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிக்க தடை விதிக்கப்பட்டது, பொது ஆரோக்கிய ஆர்வலர்களுக்கும் பறவை ஆர்வலர்களுக்கும் இடையே மோதலை உருவாக்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

மும்பையில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிப்பதற்கு அண்மையில் நீதிமன்றம் தடை விதித்தது உள்ளாட்சி அமைப்புகள், பொது சுகாதார செயற்பாட்டாளர்கள் மற்றும் பறவைகளை நேசிப்பவர்கள் ஆகியோர் இடையே ஒரு முக்கிய மோதல் புள்ளியாக மாறியுள்ளது.

பல தசாப்தங்களாக இருந்த ஒரு புறா உணவளிக்கும் இடமான “கபுதர்கானா” மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மாதம், நூற்றுக்கணக்கானோர் காவல்துறையினருடன் இரண்டு முறை மோதினர். (கபுதர் என்பது இந்தியில் புறா என்று பொருள்படும்.)

சிலர் அந்த இடத்தை மறைத்திருந்த தார்ப்பாய் திரைகளை கிழித்தெறிந்ததுடன், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

மற்றொரு போராட்டத்தில் சுமார் 15 பேர் காவல்துறையால் சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com