இது குறித்து, “ஜூலை மாதத்திற்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி” எனப் பேசியிருக்கிறார் கில்.
“ஒருகேப்டனாக முதல்முறை களமிறங்கிய தொடரில் வெளிப்படுத்திய திறனுக்காக இது கிடைக்கும்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பர்மிங்கமில் அடித்த இருநூறுக்காக நான் எப்போதும் மகிழ்ச்சியடைவேன், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் சிறப்பம்சமாக அது இருக்கும்.
ஒரு கேப்டனாக இந்தத் தொடர் எனக்கு சிறந்த படிப்பினை, இரண்டு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் சிறப்பாக விளையாடினர், எல்லா வீரர்களும் இதை நீண்டநாட்களுக்கு நினைவில் வைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
என்னை இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்த வீரர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். வரும் சீசனில் என் ஃபார்மைத் தொடரவும் நாட்டுக்கு பல விருதுகள் பெற்றுக்கொடுக்கவும் ஆவலாக இருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.