சிறுவாணி ஒப்பந்தம்: தமிழ்நாடு – கேரளா இடையே என்ன சிக்கல்?

Share

  • மோகன்
  • பிபிசி தமிழுக்காக

சிறுவாணி அணை

தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய அளவில் பங்கு கிடைப்பதில்லை என்பது தமிழ்நாடு – கேரள அரசுகளுக்கு இடையே விவாதப் பொருளாகியிருக்கிறது.

கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியார் திட்டங்களின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேரள முதல்வருக்கு சமீபத்தில் இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார். சமீபத்தில் கோவை வந்திருந்த அமைச்சர் கே.என்.நேரு, கேரள அரசு சிறுவாணியிலிருந்து உரிய அளவில் தண்ணீர் வழங்குவதில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.

ஜூன் 19ஆம் தேதி எழுதிய கடிதத்தில் ஸ்டாலின், `சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்திப் பராமரிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கேரள முதல்வர் உத்தரவிட வேண்டும்` என தெரிவித்திருந்தார். தமிழ்நாடு முதல்வரின் கடிதத்தை தொடர்ந்து சிறுவாணி அணையில் வழங்கப்படும் தண்ணீர் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com