2011 உலகக்கோப்பைக்கு பிறகு தோனி சீனியர்களை அணியிலிருந்து வெளியேற்றிய சம்பவம் பெருத்த விமர்சனங்களையும் சந்தித்தது. ஆனால், தோனி எடுத்த அந்த முடிவுதான். அடுத்த 10-15 ஆண்டுகளுக்கான வலுவான இந்திய அணியை கட்டமைக்க காரணமாக இருந்தது. ஒரு கேப்டனாக பலரும் செய்யாத காரியத்தை தோனி செய்தார். தனக்கும் பிறகுமான ஒரு அணியை அவர் கட்டமைத்துக் கொடுத்தார்.

தோனி இந்திய அணியிலிருந்து ஒதுங்கும் போது கோலியின் கீழ் எந்த அணிக்கும் சவாலளிக்கக்கூடிய அணியாகவே இருந்தது. அதாவது, தோனியின் கையில் இந்திய அணி வரும்போது அது பெரும் வீழ்ச்சியை சந்தித்திருந்தது. தோனி அங்கிருந்து இந்திய அணியை கட்டியெழுப்பினார். ஆனால், தோனி அணியை விட்டுச் செல்கையில் அந்த அணி ஒரு உயர்மட்ட நிலையில் இருந்தது. தோனியை ஆகச்சிறந்த கேப்டனாக, ஆகச்சிறந்த வீரராக, ஐ.சி.சியின் Hall of Fame இல் வைத்து கொண்டாட இதை விட வேறெந்த காரணமும் தேவையில்லை.!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…