தமிழ்நாட்டில் சாதி சங்கங்களை அதிர வைத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு – நடைமுறையில் சாத்தியமா?

Share

பள்ளி, கல்லூரிகளில் சாதி பெயர்களை நீக்க உத்தரவு

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு முழுவதும் உள்ள சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவது எந்த அளவுக்குச் சாத்தியம்?

தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கத் தவறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அந்தச் சங்க நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே அளித்த தீர்ப்புகளை ரத்துசெய்து, சங்கத்திற்கான தேர்தல் நடவடிக்கைகளை தொடர அனுமதி அளிக்க அந்த வழக்கில் கோரப்பட்டிருந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com