நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுலுக்கு ஆதரவான போராட்டத்தின்போது ஜோதிமணி எம்.பி மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகப் புகார்

Share

  • ஜோ மகேஸ்வரன்
  • பிபிசி தமிழ்

கரூர் எம்.பி ஜோதிமணி

பட மூலாதாரம், congress/twitter

படக்குறிப்பு,

டெல்லியில் கைது செய்யப்பட்ட ஜோதிமணி

நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் நடைபெறும் விசாரணையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கரூர் எம்.பி ஜோதிமணியை ஆடையைக் கிழித்து போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். என்ன நடந்தது ? விரிவாக பார்க்கலாம்.

நேஷ்னல் ஹெரால்டு பணப்பரிமாற்ற முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை இயக்குரகத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஜுன் 13ம் தேதி ஆஜரானார். தனது சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள், தொண்டர்களுடன் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் சென்றார். தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் அவர் விசாரணைக்கு ஆஜரானார்.

முதல் நாளில் இருந்து மூன்றாவது நாளான இன்றும் காங்கிரஸ் எம்.பிக்கள், தொண்டர்கள் டெல்லியின் பல்வேறு இடங்களில் பேரணியாக செல்ல முயன்றனர். ராகுல் காந்தியிடம் நடைபெறும் விசாரணையைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

குறிப்பாக, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com