Priyansh Arya : ‘டெல்லி ப்ரீமியர் லீக் டு ஐ.பி.எல் ஹீரோ!’ – யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

Share

‘காப்பாற்றிய பிரியான்ஷ்!’

கலீல் அஹமது, முகேஷ் சௌத்ரி, அஷ்வின் என சென்னையின் பௌலர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்துக்கொண்டே இருந்தனர். பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஷ் ஐயர், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் என ஒரு முனையில் விக்கெட் விழுந்துகொண்டே இருந்தது. ஆனால், இன்னொரு முனையிலிருந்து சென்னையின் பௌலர்களை விழி பிதுங்க வைக்கும் வகையில் பிரியான்ஷ் அட்டாக் செய்துகொண்டே இருந்தார். கலீல் அஹமது வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டுதான் தொடங்கினார்.

‘அட்டாக் மோடில் பிரியான்ஷ்!’

சொல்லப்போனால் முதல் பந்தே சிக்சர்தான். முகேஷ் சௌத்ரியின் ஓவரிலும் பவுண்டரியையும் சிக்சரையும் அடித்துக் கொண்டே இருந்தார். இவரை கட்டுப்படுத்தவே அஷ்வினை அழைத்து வந்தார்கள். அஷ்வினின் முதல் ஓவரில் 21 ரன்கள். பிரியான்ஷ் மட்டும் ஒரு பவுண்டரியையும் சிக்சரையும் அடித்திருந்தார். அஷ்வினையும் விட்டு வைக்கவில்லை. 12 வது ஓவரிலும் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார். நடப்பு சீசனில் சென்னையின் சிறந்த பௌலரான நூர் அஹமதுவுக்கு எதிராகவும் அட்டாக் மோட்தான்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com