சீசனின் முதல் போட்டியாக மும்பை அணி சென்னையை எதிர்கொண்டது. அந்த முதல் போட்டியிலேயே மும்பை அணி விக்னேஷ் புத்தூருக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட விக்னேஷ், ருத்துராஜ், துபே, தீபக் ஹூடா என மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். தோனி, விக்னேஷை தட்டிக் கொடுத்துப் பேசினார். விக்னேஷ் எங்களின் பெருமைமிகு கண்டுபிடிப்பு என சூர்யகுமார் பாராட்டியிருந்தார்.
இந்நிலையில், இன்று குஜராத்தில் நடந்து வரும் போட்டியில் மும்பை அணி விக்னேஷை ப்ளேயிங் லெவனில் எடுக்கவில்லை. மாற்று வீரர்கள் பட்டியலிலும் விக்னேஷ் பெயர் இல்லை.
அறிமுகப் போட்டியிலேயே கலக்கிவிட்டு அடுத்தப் போட்டியில் வாய்ப்பில்லாமல் இருப்பது கொடுமை. விக்னேஷூக்கு ஏதாவது காயமா என்பது பற்றி தகவல் எதுவும் சொல்லப்படவில்லை.