குனால் கம்ராவின் பகடிப் பாடல் சர்ச்சை குறித்து ஏக்நாத் ஷிண்டே பிபிசியிடம் கூறியது என்ன?

Share

ஏக்நாத் ஷிண்டே
படக்குறிப்பு, கருத்து சுதந்திரத்துக்கு ஓர் எல்லை உள்ளது என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்

ஸ்டாண்ட் அப் காமெடியன் குனால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் குறித்து பகடியாகப் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக, தன்னுடைய கருத்தை ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

பிபிசி மராத்தியின் ‘ராஷ்டிர மகாராஷ்டிரா’ நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே குனால் கம்ரா சர்ச்சை குறித்துத் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

“இங்கு கருத்து சுதந்திரம் உள்ளது. எங்களுக்கு நகைச்சுவை குறித்த புரிதல் உள்ளது. ஆனால், அதற்கும் ஓர் எல்லை உள்ளது. இது ஒருவருக்கு எதிராகப் பேசுவதற்கு ‘ஒப்பந்தம்’ எடுத்துக் கொண்டதைப் போன்றுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

“இதே நபர் (குனால் கம்ரா) உச்சநீதிமன்றம், பிரதமர், அர்னாப் கோஸ்வாமி மற்றும் சில தொழிலதிபர்கள் குறித்தும் பேசியுள்ளார். இது கருத்து சுதந்திரம் அல்ல. இது மற்ற யாருக்காகவோ வேலை பார்ப்பது” எனவும் அவர் கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com