ஆன்லைன் ரம்மி யாரைக் குறி வைக்கிறது? அதை விளையாடும் ஆசையைக் கைவிடுவது எப்படி?
ஆன்லைன் ரம்மியில் பணத்தை ஏமாந்து, பலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு அந்த விளையாட்டின் அம்சங்களை ஆராய்வதற்காக, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக தமிழ்நாடு உள்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு உண்மையில் திறன்களை வளர்க்கிறதா அல்லது இழப்புகளை ஏற்படுத்துகிறதா என்று கண்டறியவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி யாரையெல்லாம் குறி வைக்கிறது, அதை விளையாட வேண்டுமென்ற ஆசையிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: