போரில் கலந்துகொள்ளும் இரு அணி வீரர்களும் தும்பையின் அழகிய பூங்கொத்தை சூடிக்கொள்வார்களாம். போரிடும் இருவருமே தூய்மையானவர்கள் என்பதைக் குறிக்கவே இந்த ஏற்பாடு. எதிராளியும் தூய்மையானவர் என்பதைக் குறிக்க, ’தும்பைப் பகைவர்’ என்கிறார் குமட்டூர் கண்ணனார். ’தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி’ என குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடுகிறார்.
தாவரவியல் பெயர்:
Leucas aspera
குடும்பம்:
Lamiaceae
கண்டறிதல்:
இரண்டடி வரை வளரும் சிறுசெடி வகை. தூய்மைக்கு எடுத்துக்காட்டாய்த் திகழும் வெண்ணிற மலர்கள் தும்பைக்கு உரிய அடையாளம். சிறுதும்பை, பெருந்தும்பை ஆகிய வகைகளும் தும்பையில் உண்டு. மழைக் காலங்களில் பரவலாக தும்பை செடிகளைப் பார்க்கலாம்.
தாவரவேதிப் பொருள்கள்:
Triterpenoids, Oleanolic acid, Sitosterol, Leucasperone
தும்பை… நலத்துக்குத் தெம்பு!
– மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)