‘வருண் சக்கரவர்த்தி மேஜிக்!’
9 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களுக்கு எதிராகத்தான் நியூசிலாந்து இழந்திருந்தது. இந்த 9 விக்கெட்டுகளில் 7 விக்கெட்டுகள் lbw அல்லது போல்ட் முறையில் வந்திருந்தது. எனில், இந்திய ஸ்பின்னர்கள் அத்தனை டைட்டான லைன் & லெந்த்தில் வீசினார்கள் என புரிந்துகொள்ளலாம். தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மட்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதே துபாய் மைதானத்தில்தான் 2021 இல் அவரது கரியர் ஆரம்பிப்பதற்குள் முடிந்திருந்தது. ஐ.பி.எல் லிலும் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி மூன்று ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு கம்பேக் கொடுத்தார். சிறப்பாக ஆடி அணியில் இடத்தை தக்கவைத்தார். சாம்பியன்ஸ் டிராபிக்கும் தேர்வு செய்யப்பட்டார். இங்கே அவர் முதல் சாய்ஸாக கருதப்படவில்லை. வாய்ப்புக்காக காத்திருந்தார். வாய்ப்பு கிடைத்தவுடன் முதல் போட்டியிலேயே 5 விக்கெட் ஹால். இத்தனைக்கும் நியூசிலாந்து அணிதான் இந்தத் தொடரில் வேறெந்த அணியை விடவும் மிகச்சிறப்பாக ஸ்பின்னர்களை எதிர்கொண்டது. அப்படிப்பட்ட ஒரு அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்து நின்று வில்லியம்சனுக்கு எந்த ஆதரவும் கிடைக்காமல் செய்துவிட்டார்.

‘இந்தியா வெற்றி!’
அக்சரும் குல்தீப்பும் கூட சிறப்பாக வீசியிருந்தனர். ஒற்றை ஆளாக நின்று ஆடிய வில்லியம்சனை அக்சர் படேல் தன்னுடைய ஸ்பெல்லின் கடைசி பந்தில் வீழ்த்தினார். 81 ரன்களில் க்ரீஸை விட்டு இறங்கி பெரிய ஷாட்டுக்கு முயன்று வில்லியம்சன் ஸ்டம்பிங் ஆனார். அத்தோடு நியூசிலாந்தின் நம்பிக்கையும் ஒடிந்தது.
45.3 ஓவர்களில் 205 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட் ஆக இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நாளை மறுநாள் நடக்கவிருக்கும் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவிருக்கிறது.