சிரியா: நாடு திரும்பிய இந்தியர்கள் கூறுவது என்ன?

Share

சிரியாவில் இருந்து திரும்பிய இந்தியர்கள் கூறுவது என்ன

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, லெபனானுக்கான இந்திய தூதர் நூர் ரஹ்மான் ஷேக், சிரியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்திய குடிமக்களுடன் உள்ள இந்த புகைப்படம் டிசம்பர் 11 அன்று எடுக்கப்பட்டது

” எனக்கு இதற்கு முன்பும் இரண்டு முறை சிரியாவுக்கு விசா கிடைத்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் என்னால் செல்ல முடியவில்லை. இந்த முறை விசா கிடைத்ததும், கண்டிப்பாக செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால், நான் அங்கு பார்த்த விஷயங்களும், நான் நாடு திரும்பிய நிலையையும் உணர்ந்த பிறகு, நான் மீண்டும் அங்கு செல்ல விரும்பவில்லை”.

44 வயதான தொழிலதிபர் ரவி பூஷனின் வார்த்தைகள் இவை. இவரது நிறுவனம் மின் உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ளது.

தன் நிறுவனம் சார்ந்த பணிக்காக, டிசம்பர் 3ஆம் தேதி சிரியா சென்றடைந்தார் ரவி பூஷன். சிரியாவில் சமீபத்தில் நடந்த குழப்பங்களுக்கு மத்தியில் இந்திய அரசின் உதவியுடன், அவர் டிசம்பர் 12 அன்று நாடு திரும்ப முடிந்தது.

சிரியாவில் நடக்கும் 13 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் குறைந்தது ஒரு கோடியே 20 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை, சிரியாவின் நிலைமையை உலகின் மிகப்பெரிய இடப்பெயர்வு நெருக்கடி என்று வர்ணித்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com