இலங்கை: பசில் ராஜபக்ஷ எம்பி பதவியில் இருந்து விலகல் – அடுத்த திட்டம் என்ன?

Share

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக

இலங்கை பசில் ரஜாபக்ஷ

பட மூலாதாரம், Getty Images

இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தாம் வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவயில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 9) விலகியிருக்கிறார். தமது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் அவர் வழங்கினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார்.

அதைத்தொடர்ந்து ஆளும் அரசாங்கத்தின் நிதி அமைச்சராக சிறிது காலம் பதவி வகித்தார். அண்மையில் அவர் தமது அமைச்சு பொறுப்பில் இருந்து விலகினார். ஆளும் கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்று வந்த நிலையிலேயே பசில் அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகியதாக பேசப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் இப்போது விலகியிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com