பிரியங்கா காந்தி: வயநாடு இடைத்தேர்தலில் முந்துவது யார்? கள நிலவரம் என்ன?

Share

பிரியங்கா காந்தி

பட மூலாதாரம், ANI

வயநாடு மக்களவைத் தொகுதி, ஆறே மாதங்களில் இரண்டாம் முறையாகத் தேர்தலைச் சந்திக்கிறது.

இந்தத் தேர்தல் ராகுல் காந்தியால்தான் அவசியமின்றி நடப்பதாக, பிற கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ராகுல் காந்தி தன்னுடைய இடத்தில் தன் சகோதரியை நிற்க வைத்திருப்பது வயநாடு மக்கள் மீதான அவரின் அன்பின் வெளிப்பாடு என்று கூறுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

பிரியங்கா காந்தி இங்கு போட்டியிடுவதால், தேசிய அளவில் இந்தத் தொகுதி மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. வயநாடு இடைத்தேர்தலில் என்ன நடக்கிறது என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

வயநாடு மக்களவைத் தொகுதியில், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள கல்பெட்டா, மானந்தவாடி, சுல்தான்பத்தேரி, திருவம்பாடி, நிலம்பூர், எரநாடு மற்றும் வண்டூர் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. 14 லட்சத்து 71 ஆயிரத்து 742 வாக்காளர்கள் உள்ளனர். 16 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com