அமெரிக்கா: டிரம்ப் கட்டுப்பாடற்று, சுதந்திரமாக ஆட்சி செய்ய தேர்தல் முடிவுகள் வழிவகுக்குமா?

Share

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை அதிபர் ஆகியுள்ளார். டிரம்ப் ஹிலாரி கிளிண்டனை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய எட்டு ஆண்டுகள் கழித்து, அதேபோன்று வெள்ளை மாளிகையில் இருந்து அவர் ஜோ பைடனால் வெளியேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து, டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சியில் அமர உள்ளார்.

“இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான தீர்ப்பு” வழங்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

“(இந்த ஆட்சிக் காலம்) உண்மையிலேயே அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்,” என்று ஃப்ளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச் நகரில் இரவில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் ஆர்ப்பரிக்கும் கூட்டத்திற்கு நடுவே உறுதியளித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை இல்லாத வலுவான அரசியல் இயக்கம்

டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்க அரசியல் கடந்த 2016இல் தொடங்கி, 2020இல் டிரம்பின் தோல்விக்குப் பின்னர் கைவிடப்பட்டதாககக் கருதப்பட்ட பழமைவாத ஜனரஞ்சகவாதத்தை நோக்கி உறுதியாக இடம்பெயர்ந்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com