ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணியில் தோனி தக்கவைப்பு – புதிய விதிகள் என்ன?

Share

2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம், Getty Images

2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் டி20 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடுகிறார் என்று அந்த அணி தற்போது அறிவித்துள்ளது. இது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. ஆனால், அதில் புதிய சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடருக்காக அணிகளின் உரிமையாளர்கள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்து, மற்ற வீரர்களை விடுவிக்கும் காலக்கெடு இன்று (அக்டோபர் 31) முடிகிறது. இதன்படி, ஐ.பி.எல் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை ஐ.பி.எல் நிர்வாகத்திடம் முறைப்படி அறிவித்தன.

இதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தின் இறுதியில் அல்லது டிசம்பர் மாதத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நடத்தப்படும். அந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியிடம் இருக்கும் கையிருப்புத் தொகைக்கு ஏற்ப வீரர்களை ஏலத்தில் வாங்கும்.

இந்தத் தக்கவைப்புப் பட்டியல் மற்றும் விடுவிப்பு பட்டியலுக்குப்பின் ஒவ்வொரு அணியிலும் 6 கிரிக்கெட் வீரர்கள் மட்டும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மற்ற வீரர்கள் அந்தந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஐ.பி.எல் ஏலத்தில் புதிய வீரர்கள் வாங்கப்படுவார்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com