இஸ்ரேல்: பெஞ்சமின் நெதன்யாகு மீது நடந்த கொலை முயற்சியின் பின்னணி என்ன? யார் காரணம்?

Share

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டின் மீது தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

நேற்று (அக்டோபர் 19) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீடு மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

பிரதமர் நெதன்யாகுவின் வீடு, செசரியா என்ற கடற்கரை நகரத்தில் அமைந்துள்ளது. லெபனானில் இருந்து இந்த ஆளில்லா விமானம் அனுப்பப்பட்டதாகவும் பிரதமர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பாகப் பேசிய நெதன்யாகு, ஹெஸ்பொலா அவரைக் கொல்ல முயற்சி செய்து பெரிய தவறிழைத்துவிட்டதாகக் கூறினார்.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டப்பட்ட அறிக்கையில், “தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் பிரதமரும் அவருடைய மனைவியும் அந்த வீட்டில் இல்லை. மேலும் இந்தத் தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,” எனக் குறிப்பிட்டிருந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com