அதனால், மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலமில்லாத நிலையில் நேற்று இரவு வயதுமூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “இந்தியாவை உலகளவில் எடுத்துரைத்த மாபெரும் மனிதர்.

ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களை ஊக்குவித்தவர். பல தலைமுறைகளுக்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியவர். அனைவராலும் விரும்பப்படும் நபர். மாபெரும் ஆன்மாவுடன் நான் செலவழித்த நொடிகளை என்றென்றும் போற்றுவேன். இந்தியாவின் உண்மையான மகனை இழந்துவிட்டோம்” என்று குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.