இலங்கை நெருக்கடி: “சமூக ஊடகங்களை முடக்க அரசு முயற்சி” – சஜித் பிரேமதாச

Share

சஜித் பிரேமதாச

(இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (07/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

வரி அறவீடுகள் மூலம் சமூக ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக சமூக வலைதள பாவனையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக ‘தினகரன் – வாரமஞ்சரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: “வரி அறவீடுகள் மூலம் சமூக ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ‘கோட்டா கோ ஹோம்’ உள்ளிட்டவற்றின் குரலை முடக்கியதைப் போன்று சமூக வலைதளங்களின் குரல்களையும் முடக்குவதற்கான நடவடிக்கையே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்ததாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20 ஆவது திருத்தத்தை இல்லாமலாக்க அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com