நடாலிடம் தோற்ற பிறகு, நடாலின் காயங்கள் குறித்து ஜோக்கோவிச் பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படிப் பேசியிருந்தார். வலியை உண்டாக்கிக் கொண்டிருந்த காலை கழற்றி வீசும் சூழல் ஏற்பட்டாலும் இறுதிப்போட்டியில் ஆடியே தீருவேன் என்னும் உத்வேகத்துடன்தான் கேஸ்பரூட்டிற்கு எதிரான போட்டியில் நடால் இறங்கினார்.
ஆனால், இறுதிப்போட்டியில் நடால் அவ்வளவாக போராட வேண்டியிருக்கவில்லை. முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி அதுவும் களிமண் களத்தில் நடாலுக்கு எதிராக என்னும் போது அது கொடுக்கும் மிரட்சியை கையாள்வதே தனி கலைதான். கேஸ்பரூட்டால் அதைச் சரியாக செய்ய முடியவில்லை. 6-3, 6-3, 6-0 நடால் 2 மணி நேரம் 18 நிமிடங்களிலேயே ஆட்டத்தை முடித்தார்.
மரியானா புவர்தா, தாமஸ் படச், டேவிட் ஃபெரரர், வாவ்ரிங்கா, கெவின் ஆண்டர்சன், டொமினிக் தீம், மெத்வதேவ் இவர்கள் எல்லாம் தங்களின் முதல் கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டியிலேயே நடாலை எதிர்கொண்டு வீழ்ந்தவர்கள். இந்தப் பட்டியலில்தான் இப்போது கேஸ்பரூட்டின் பெயரும் இணைந்திருக்கிறது. நடால் இவர்களின் கனவுகளைச் சிதைத்தவர். ஆனாலும், இதில் பெரும்பாலானவர்கள் நடாலுக்கு எதிரான தோல்வியை பற்றி வருந்துவதைவிட அந்தத் தருணத்தில் நடாலுக்கு எதிராக நின்று சண்டை செய்ததையே பெருமையாக நினைக்கின்றனர்.
என நடாலுக்கு எதிராகத் தோற்றுவிட்டு கேஸ்பரூட் பேசியிருந்தார்.
இப்போதுமே நடாலின் உடற்தகுதி குறித்து அதிக கேள்விகள் எழும்பிக் கொண்டுதான் இருக்கின்றன. இனியும் தொடர முடியுமா என்பதில் நடாலே கொஞ்சம் முடிவெடுக்காமல்தான் இருக்கிறார். ஆனால், பொறுமையாக இருங்கள். நடால் நிச்சயமாக ஆச்சர்யத்தை நிகழ்த்துவார்!