இன்றைய நிலையில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கும் வழியாகப் பங்குச் சந்தை முதன்மையாக இருக்கிறது. அதனால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் முதலீடு செய்ய ஆர்வமாக முன்வருகிறார்கள். ஆனால், பங்குச் சந்தையில் 5000-க்கும் மேலான பங்குகள் உள்ளன. ஆனால், இதில் எந்தப் பங்கை வாங்குவது, எந்தத் துறை சார்ந்த பங்கை வாங்குவது, என்ன விலையில் வாங்குவது, என்ன விலையில் விற்பது, எத்தனை பங்குகளை வாங்கலாம், இப்படி பல கேள்விகள் இருக்கின்றன.
முதலீட்டாளர்களின் இது போன்ற பல கேள்விகளுக்குப் பதில் கொடுக்கும் பணியை நாணயம் விகடன் தொடர்ந்து செய்துவருகிறது. அந்த வரிசையில், நாணயம் விகடன் முதலீட்டாளர்களை நேரடியாகச் சந்தித்து பங்குச் சந்தை முதலீடு தொடர்பாகப் பயிற்சி வகுப்புகளையும் எடுத்து வருகிறது.

தற்போது பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர் பங்குச் சந்தை நுணுக்கங்களை, பங்குச் சந்தை முதலீட்டில் லாபம் பார்ப்பதற்கான உத்திகளைக் கற்றுத்தர உள்ளார்.