Doctor Vikatan: என் அம்மாவிற்கு வயது 60 ஆகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, கீழே விழுந்ததன் காரணமாக முதுகுத்தண்டுவட எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு நான்கு மாதங்களாக ஓய்வில் இருந்தார். நான்கைந்து நாள்களாக தலைச்சுற்றல் இருந்தது, ரத்தப் பரிசோதனை செய்ததில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது தெரிய வந்தது. மருத்துவர் அறிவுரையின்படி இப்போது மாத்திரை எடுத்து வருகிறார். ஒருமுறை சர்க்கரை மாத்திரை எடுத்துக் கொண்டால் தொடர்ந்து ஆயுள் முழுவதும் சாப்பிட வேண்டுமா அல்லது சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தால் மாத்திரைகளை நிறுத்திவிடலாமா?
– Agomathi, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி
உங்கள் அம்மாவின் வயது இந்தப் பிரச்னைக்கு ஒரு காரணம். தவிர முதுகுத்தண்டில் அடிபட்டதாகச் சொல்கிறீர்கள். அது இன்னொரு காரணம்.