டயப்பர், சானிட்டரி நாப்கின் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ள போதிலும், அவற்றை டிஸ்போஸ் செய்வதற்கான பாதுகாப்பான முறைகள் இல்லை.
எனவே ஒவ்வொரு டயப்பர், சானிட்டரி நாப்கின், ஆணுறைகள் போன்ற பொருள்களுடன் டிஸ்போசபிள் பவுச்சுகளையும் சேர்த்து வழங்கும்படி, உற்பத்தியாளர்களை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி, டயப்பர்கள், நாப்கின்கள் போன்றவற்றை தயாரிப்பதற்கு மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களைப் பயன்படுத்துமாறும், அப்படியில்லை எனில் டிஸ்போசபிள் பைகள் அல்லது ரேப்பர்களை வழங்குமாறும் 2013-ல் உற்பத்தியாளர்களிடம் கோரப்பட்டது.