அப்படியென்றால் இறந்தவர்களிடமே கேட்டு விடுவோம் என்று, சாவிற்கு அருகில் சென்று, உயிர் திரும்பியவர்களைக் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கி இருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த கதிர்வீச்சு புற்றுநோயியல் மருத்துவர் ஜெஃப்ரி லாங்.
இதற்காக மரணம் வரை சென்று திரும்பிய 5,000 -க்கும் மேற்பட்டவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்துள்ளார். இந்த அனுபவங்களின் இறுதியில் அவர் கூற வருவது ஒன்றுதான், `மரணத்திற்குப் பிறகு வாழ்வு உண்டு…’
பலரிடமிருந்து அவர் கேட்ட கதைகளின் அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய கட்டுரையில், “கோமா நிலையில் உள்ள ஒருவர் அல்லது மருத்துவ ரீதியாக இதயத் துடிப்பு இல்லாமல் இறந்ததாகக் கூறப்படும் ஒருவர், கண்டு, கேட்டு, உணரும் உணர்வுகளையும், பிற உயிரினங்களோடு தொடர்பு கொள்ளும் அனுபவங்களையும் பெற்றிருக்கிறார்.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கதையும் வித்தியாசமானதாக இருந்தாலும், பெரும்பாலும் ஒரே மாதிரிதான் நடந்திருக்கிறது.