Doctor Vikatan: ஆதார் கார்டு மற்றும் வங்கி போன்ற இடங்களில் ரேகை வைக்கும் தேவை இன்று இருக்கிறது. அதுபோன்ற தருணங்களில் என் தோழியின் விரல் ரேகையைப் பதிவு செய்வதில் மிகவும் சிரமமாக உள்ளதாகச் சொல்கிறாள். தொடர்ந்து கைகளைப் பயன்படுத்தி வேலை செய்வதாலோ, வயோதிகத்தாலோ ரேகைகள் தேய்ந்துவிட வாய்ப்பு உண்டா?
– Meenakshi Mohan, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்
ரேகைகள் குறித்துப் படிப்பதை “டக்டைலோகிராபி’ ( Dactylography) என்று சொல்வோம். அடையாளம் காண்பதற்கு கைரேகைகளைப் பயன்படுத்தலாம் என்பதை முதலில் கண்டறிந்து சொன்னவர் வில்லியம் ஹெர்ஷெல். ஒவ்வொருவரின் கைரேகையும் தனித்துவமானது மற்றும் நிரந்தரமானது என்பதையும் அவர்தான் கண்டறிந்தார்.