நீ யாரு…? – குணசீலத்துக் கதை – 5 | My Vikatan | My vikatan psychology article series

Share

கவுன்சிலிங் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. “மனோகர் மனோகர்…”, என்று மூச்சுக்கு மூன்று முறை கேட்கும் வாணியிடம், “மனோகர் வந்துருவாரு…!” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கச்சொன்னார் வரதராஜன்.

கவுன்சிலிங் இறுதிகட்டத்தை எட்டியது.

“அழைக்கும்போது நீங்க மட்டும் உடனே உள்ளே வாங்க..”- என்று வாணியின் கணவர் பரமசிவத்துக்குச் சொல்லிவிட்டு, மற்ற யாரும் வந்துர வேண்டாம். என்றும் கண்டிப்பாகக் கூறினார் வரதராஜன்.

‘அறிதுயில் சிகிச்சை’ தொடங்கித் தொடர்ந்தார் சைக்காலஜிஸ்ட். 

தன் எதிர்பார்ப்பின்படி, வாணி செயல்படத்துவங்கிய நேரம், வாணியின் முன் அந்த மேக்ஸி சைஸ் புகைப்படத்தைக் காட்டிக் கேட்டார். 

“என்னோட பெட் அனிமல் (வளர்ப்புப் பிராணி)” எங்கே இருக்கு..? எங்கே இருக்கு…? என்று சந்தோஷத்துடன் பரபரத்தாள் வாணி.

“தாறுமாறா ஓடி, ரயில்வே கேட் ‘க்ராஸ்’ பண்ணும்போது அடிபட்டுச் செத்துட்டுது வாணி…” அதிர்ச்சிக்குரலில் திகில் பரப்பினார் கவுன்சிலர் வரதராஜன்.

பேரதிர்ச்சியில் மயங்கினாள் வாணி.

மயக்கதலிருந்து விழித்தபோது, வாணியின் எதிரே பரமசிவத்தை நிற்க வைத்தார்.

“என்னங்க..! உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே..?”- என்று பரமசிவத்தின் உடம்பெல்லாம் தொட்டுத் தடவி, கண்ணீர் உகுத்தாள் வாணி. 

வெளியே கண்ணாடித்தடுப்பிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த இருவரின் பெற்றோரும் கண்ணீர் வடித்தனர். இது ஆனந்தக் கண்ணீர் மட்டுமல்ல. கவுன்சிலர் வரதராஜக்கு செலுத்தும் நன்றி அறிவிப்பாகவும் இருந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com