குழந்தையின் உறவினர்கள் தரப்பில் பேசினோம், `தடுப்பூசி போடுவதற்கு முன்பு குழந்தை சிரித்தபடி நன்றாக இருந்திருக்கிறது. ஊசி போட்ட உடனே குழந்தைக்கு உடல்நிலை முடியாமல் போய்விட்டது. இரண்டு இடங்களில் அடுத்தடுத்து நான்கு ஊசிகள் போட்டிருக்கின்றனர். குழந்தைக்கு என்ன ஆனது… ஏன் அடுத்தடுத்து ஊசி போட்டார்கள் எனத் தெரியவில்லை. அலட்சியமாகச் செயல்பட்டதால் குழந்தை பலியாகியிருக்கிறது இதற்கு காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
விசாரணைக்குப் பிறகே, குழந்தையின் மரணத்துக்குக் காரணம் தெரியவரும் என்கிறார்கள்.