மொபைல்போனை கழிவறைக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. சுத்தத்தைக் குறித்துத் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருந்தாலும், இது போன்ற பழக்கவழக்கங்கள் உடல்நல பாதிப்புகளையே ஏற்படுத்தும்.
இந்நிலையில், `NordVPN’ என்ற நெட்வொர்க் இணைப்பை வழங்கும் நிறுவனம், இது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் 10-ல் 6 பேர், குறிப்பாக இளைஞர்கள் கழிவறையில் மொபைல் போனை உபயோகிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆய்வில் பங்கேற்றவர்களில்…
* 61.6 சதவிகிதம் பேர், கழிப்பறை இருக்கையில் அமர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக கணக்குகளைச் சரிபார்த்ததாக ஒப்புக்கொண்டனர்.
* 33.9 சதவிகிதத்தினர், தற்போதைய நடப்புகளை அறிந்து கொள்வதற்காக, மொபைல்போனை பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
* 24.5 சதவிகிதம் பேர், தங்களின் அன்புக்குரியவர்களுக்குச் செய்தி அனுப்புவது அல்லது அழைப்புகளை மேற்கொள்வதற்காக, மொபைல்போனை கழிவறையில் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட்போனை கழிவறைகளில் பயன்படுத்தும் போது மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடிய பாக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகள், மொபைல்போனில் வாழ்வதற்கான நிலையை நாமே ஏற்படுத்துகிறோம்.