சமீபகாலமாக ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப உலகில் பேசுபொருளாக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் அது குறித்து பல குழப்பங்களும், அது வேலையிழப்புக்கு காரணமாகுமோ என்ற அச்சமும், மக்கள் மத்தியில் இருக்கிறது.
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவின் மூலம் இதய நோய்களைக் கண்டறிய முடியும் என்றும் சிடி, எம்.ஆர்.ஐ ஸ்கேனுக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு செயல்படும் என்றும் செய்திகள் வரத்தொடங்கியுள்ளன.
கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை, செயற்கை நுண்ணறிவு மூலம் இதய நோயைக் கண்டறிய முடியும் என்றார். கூகுள் லென்ஸ் மூலம் நம்முடைய விழித்திரையை ஸ்கேன் செய்வதன் மூலம் இது சாத்தியம் என்று தெரிவித்திருந்தார்.
அதே போல் கூகுள் லென்ஸ் மூலம் ஒருவரின் வயது, அவர் புகைப்பழக்கம் உள்ளவரா…. எதிர்காலத்தில் அவருக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா போன்றவற்றையும் கண்டறியலாம் என்று சில மாதங்களுக்கு முன்பு, சுந்தர்பிச்சை தெரிவித்திருந்தார்.