ஐபிஎல் போட்டிக்காக ஆடுகளங்களை தயார் செய்வதே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தோல்விக்கு காரணமா?

Share

இந்தியா படுதோல்வி ஏன்?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வந்து கோப்பையை வெல்லாமல் இங்கிலாந்திலிருந்து வெளியேறுகிறது. கடந்த முறை நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு பேட்ஸ்மேன்கூட அரைசதம் அடிக்காத குறையை ரஹானே, ஷர்துல் தீர்த்து வைத்தனர். இந்த முறை 2வது இன்னிங்ஸிலும் ஒரு பேட்ஸ்மேன்கூட அரைசதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி நாளான இன்று 280 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வெறும் 55 ரன்களுக்கு கடைசி 7 விக்கெட்டுகளை தாரை வார்த்தனர்.

இந்திய வீரர்களிடம் போராட்டக் குணம் இல்லை

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கடைசிநாளான இன்று எந்த ஒரு போராட்டக் குணத்தையும் வெளிப்படுத்தாமல் சீட்டுக்கட்டுபோல் சரிந்தனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம், அதில் தோற்றாலும், கடைசிவரை சண்டை செய்ய வேண்டும் என்ற போராட்ட குணம்கூட இல்லாமல் கடைசி 55 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தோல்வி அடைந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com