‘கல்லறையை தோண்டி உடலுறவு கொள்வதை தடுக்க பச்சை நிற கேட்’ – இந்த செய்தி உண்மையா? இது எங்கிருக்கிறது?

Share

பாகிஸ்தான் சடலம்

பட மூலாதாரம், Twitter

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பச்சை நிறக் கதவு கொண்ட கல்லறை குறித்த விவாதம் சூடு பிடித்திருந்தது. பல ஊடக நிறுவனங்கள், இந்தக் கல்லறை பாகிஸ்தானில் இருப்பதாகவும் அங்கு புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை பாலியல் வன்புணர்விலிருந்து காக்கவே அக்கதவு நிறுவப்பட்டது என்றும் செய்தி வெளியிட்டன.

உண்மை சரிபார்ப்பு தளமான ஆல்ட் நியூஸ், சமூக ஊடகங்களில் வைரலான இந்த விஷயம் குறித்து ஆராய்ந்து, அது போலிச் செய்தி என்று கண்டறிந்தது. இந்தக் கல்லறை உண்மையில் இந்திய நகரான ஹைதராபாத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து, உறுதிப்படுத்தப்படாமல் இந்த தகவலை வெளியிட்டதற்காக அது பற்றிய செய்தியை வெளியிட்ட இணையதளங்கள், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகின்றன.

இந்திய செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ, என்டிடிவி, வேர்ல்ட் இன் ஒன் நியூஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டுடே உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு ஊடக தளங்கள் இந்தச் செய்தியை அவற்றின் டிஜிட்டல் தளங்களில் வெளியிட்டிருந்தன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com