இருவரையும் பரம வைரிகள் போல சித்தரித்து பலரும் மீம்ஸ் போட்டு வருவதை பார்க்க முடிகிறது. இப்படியானவர்களுக்காக ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக் ஒன்றை ஓட்டிப் பார்ப்போம்.
18 ஆகஸ்ட் 2008 இல் இலங்கைக்கு எதிரான ஓடிஐ போட்டியில்தான் கோலி முதன் முறையாக இந்திய ஜெர்சியை அணிந்து அறிமுகமாகியிருந்தார். அதிலிருந்து ஒரு வருடத்திற்கு கோலி இந்திய அணியில் பெரிதாக நிலையான இடத்தை பெறவே இல்லை. பெரியளவில் ஸ்கோரும் செய்யவில்லை. முதல் 12 இன்னிங்ஸ்களில் அவருக்கு திருப்புமுனையான ஆட்டம் எதுவும் அமையவில்லை.
அந்தப் போட்டியில் இந்திய அணி 316 ரன்களை சேஸ் செய்திருக்கும். கோலியோடு சேர்ந்து அந்தப் போட்டியில் கலக்கிய இன்னொரு வீரர் கவுதம் கம்பீரே. கம்பீர் அந்தப் போட்டியில் 150 ரன்களை எடுத்திருந்தார். கம்பீர் – கோலி இருவரும் இணைந்து கூட்டாக 224 ரன்களை எடுத்திருந்தனர். 300+ சேஸிங்கை இந்திய அணு வெற்றிகரமாக எட்டி முடிக்க இவர்களின் இந்த ஆட்டமே மிக முக்கிய காரணமாக இருந்தது.
போட்டி முடிந்த பிறகுதான் அந்த ஹைலைட்டான சம்பவம் நடந்திருந்தது.