இலங்கை அகதிகள் போர்வையில் இந்தியாவுக்குள் நுழையும் ‘தேடப்படும் சந்தேக நபர்கள்’

Share

இலங்கை, தமிழர்கள், அகதிகள்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் ஏராளமான இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள், இந்தியாவில் அடைக்கலம் கோரி தனுஷ்கோடி கடல் வழியாக தமிழ்நாட்டுக்குள் வந்துள்ளனர். அவர்கள் மண்டபம் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அடைக்கலம் தேடி வந்தவர்களை இந்திய அரசு அகதியாக கருதாததால், மனிதாபிமான அடிப்படையில் அவர்களை அகதிகள் முகாமில் தங்க வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடிய சிலர், இலங்கை, இந்திய சர்வதேச கடல் வழியாக அகதிகள் போர்வையில் தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இவ்வாறு சட்ட விரோதமாக வருபவர்களை உடனடியாக கண்டறிய முடியாமல் இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com