அம்ரித்பால் சிங்: பஞ்சாபுக்கு அச்சத்தை விளைவித்த இந்த கனடா மத போதகர் யார்?

Share

பஞ்சாப், அமிரித்பால் சிங், சீக்கியர்கள்

பட மூலாதாரம், Getty Images

தன்னை தானே மத போதகர் என அழைத்துக் கொள்ளும் அம்ரித்பால் சிங்கின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கடந்த வாரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்தை மிகவும் ஆக்ரோஷமாக முற்றுகையிட்டனர். அம்ரித்பால் சிங்கின் கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருந்தது.

திரண்டிருந்தவர்கள் அனைவரும் மிகவும் கோபமாக காணப்பட்டனர். அவர்களது கைகளில் துப்பாக்கிகளும் வாள்களும் இருந்தன. அம்ரித்பால் சிங்கின் கூட்டாளி விடுவிக்கப்படுவார் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்பே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முற்றுகையிட்ட அனைவரும் தங்களது கைகளில் சீக்கியர்களின் புனித நூலாக கருதப்படும் ’குரு கிரந்த் சாஹிப்’ நூலை வைத்திருந்த காரணத்தினால்தான், தங்களால் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என காவல் துறையினர் கூறியுள்ளனர்.

தங்களை காக்கும் பாதுகாப்பு அரணாக அவர்கள் குரு கிரந்த் சாஹிப்’ நூலை பயன்படுத்திக் கொண்டனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com