செய்முறை
ஸ்டெப் 1
புளியை சூடான நீரில் ஊறவைத்து 2 கப் தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
ஸ்டெப் 2
கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும், அதில் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
ஸ்டெப் 3
பின் தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதோடு, பொடியாக நறுக்கிய பரங்கிக்காயைச் சேர்த்து கைவிடாமல் வதக்கவும். பரங்கிக்காய் பாதி வெந்ததும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைச்சலை சேர்த்து, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் தனியா தூள் சேர்த்துக் கலந்து, மூடி வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
ஸ்டெப் 4
குழம்பு கொதி வர ஆரம்பித்ததும் வெல்லம் மற்றும் கட்டிப் பெருங்காயம் சேர்த்துக்கொள்ளவும். குழம்பு மேலே எண்ணெய் மிதக்கும் வரை கொதித்ததும் இறக்கவும்.
ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் பரங்கிக்காய் புளிக் குழம்பு ரெசிபியை விருந்தோம்பல் வீடியோவில் காணலாம். (விருந்தோம்பல் லிங்க்: https://www.youtube.com/c/Virundhombal)
சித்ரா ஹோட்டல் சமையல் கலைஞர் கூறிய குட்டி டிப்ஸ்!
* பரங்கிக்காயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஏனென்றால், அவற்றை வதக்கும்போதே பாதி வெந்துவிட வேண்டும். பரங்கிக்காயையும் சிறிதளவு சேர்த்தால் போதும்.
* குழம்பு ரொம்ப திக்காக இருக்கக் கூடாது.
* பரங்கிக்காய்க்குப் பதிலாக வெண்டைக்காய் அல்லது மணத்தக்காளி வத்தல் வைத்தும் செய்யலாம். புளி சேர்த்து செய்வதால் ஒரே ஒரு தக்காளிப்பழம் போதும்.