அதற்கான ஷெட் அமைத்து தீவனமும் கொடுப்போம். இதற்கு பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.6,000 வீதம் இரண்டு ஆண்டுகளும், போனஸாக ஆண்டுக்கு ரூ.20,000 வழங்கப்படும். 2 ஆண்டுகளுக்கு பிறகு கோழிகளை பெற்றுக் கொண்டு முதலீட்டு தொகையை திருப்பிக் கொடுத்துவிடுவோம்.” என ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
இதேபோல விஐபி உள்பட 3 திட்டங்களை அறிமுகப்படுத்தி விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி கோவை, திருப்பூர், கேரளாவைச் சேர்ந்த சுமார் 300 பேர் ரூ.5.65 கோடி முதலீடு செய்துள்ளனர்.