திருமணம் தாண்டிய உறவு; தட்டிக்கேட்ட கணவனை, மதுவில் விஷம் கலந்து கொலைசெய்த மனைவி! | woman arrested by police who killed her husband due to extramarital affairs in Chengalpattu

Share

இதனையடுத்து கவிதாவைக் கைதுசெய்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், “என்னுடன் பணிபுரிபவருடன் ஏற்பட்ட பழக்கம் தெரிந்ததும், என்னுடைய கணவர் சுகுமார் அடிக்கடி தகராறு செய்துவந்தார். இதனால், அவருக்கு மதுவில் விஷம் கலந்துகொடுத்து, அவரைக் கொலைசெய்ய முடிவுசெய்தேன். இதற்காக கடந்த ஞாயிறு அன்று என்னுடைய உறவினர் மூலம் கணவருக்கு என்று சொல்லி மது பாட்டில் வாங்கிவரச் சொன்னேன். அந்த மது பாட்டிலில் விஷத்தைக் கலந்தேன். அன்று வீட்டுக்கு வந்த கணவரிடம் யாரோ கொடுத்துச் சென்றார்கள் என்று சொல்லி விஷம் கலந்த மது பாட்டிலைக் கொடுத்தேன்.

அன்று ஏற்கெனவே மது அருந்திவந்ததால் மதுவைக் குடிக்காமல் அப்படியே வைத்துவிட்டார் என் கணவர் சுகுமார். பின்னர் அடுத்தநாள் வேலைக்குச் செல்லும்போது, அந்த பாட்டிலை தன்னுடன் எடுத்துச் சென்று மதிய வேளையில் அருந்தியிருக்கிறார். அப்போது, அவருடன் பணியாற்றும் ஹரிலாலும் அந்த மதுவைக் குடித்திருக்கிறார். அதனால், அவரும் இறந்துவிட்டார்” என்று தெரிவித்திருக்கிறார் கவிதா.

போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com