சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று வெளியிட்ட அறிக்கை: சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த கோவை அபுதாஹிர் பிப் 8ம் தேதி மணம் அடைந்திருக்கிறார்.இன்னும் மீதமிருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளின் மீதியுள்ள வாழ்க்கையும் சிறையில் முடிந்துவிடாமல் துரித நடவடிக்கையை மேற்கொண்டு விடுதலை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் வர்கள் உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்தருணத்தில் தமிழக அரசு, 20 ஆண்டுகளை கடந்த நீண்ட கால ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலையை இரக்கத்துடன் பரீசீலிக்க வேண்டும். முதல் கட்டமாக 50 வயதை கடந்த நோயாளி கைதிகளையாவது பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்ய துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஆயுள் தண்டனை அனுபவிக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்: முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
Share