இது குறித்து வெளியான தகவலின்படி எட்கார்டோ கிரேகோ, இத்தாலியிலுள்ள ‘Ndrangheta’ எனப்படும் மோசமான மாஃபியாவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இப்படியிருக்க, 1991-ம் ஆண்டு ஜனவரியில், மாஃபியா சண்டையின்போது ஸ்டீபனோ (Stefano), கியூசெப் பார்டோலோமியோ (Giuseppe Bartolomeo) என்ற சகோதரர்கள் கொல்லப்படுகின்றனர். அதோடு இவர்களின் உடல்கள் அமிலத்தில் கரைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் எட்கார்டோ கிரேகோவுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது.
அப்போது பத்திரிகைகளும், அவரை ஓர் இத்தாலியன் என்றும், செயின்ட்-எட்டியெனிலிருந்து(Saint-Etienne) வந்தவரென்றும் விவரித்தநா. இந்த நிலையில்தான், எட்கார்டோ கிரேகோ தற்போது 16 வருடங்களுக்குப் பிறகு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.