அந்த மாதிரி தருணங்களில் ஏற்கெனவே கொடுத்த ஆன்டிபயாட்டிக்கை நிறுத்திவிட்டு வேறு ஆன்டிபயாட்டிக் கொடுப்பது வழக்கம். ஆனால் ஒவ்வொரு ஆன்டிபயாட்டிக் மருந்துக்கும், இத்தனை நாள்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது. அது 3, 5, 7, 10, 15, 21 என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
வேறு மருந்து மாற்றிப் பரிந்துரைக்க வேண்டிய நிலையில் ரத்தத்தில் கல்ச்சர் டெஸ்ட் செய்து, அதில் எந்தவிதமான கிருமி வளர்ந்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.
ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக்கால் அந்தக் கிருமி வெளியேறவில்லை, முழுமையாக அழிக்கப்படவில்லை என்ற நிலையில் பிளட் கல்ச்சர் டெஸ்ட்டுக்கேற்ப வேறு ஆன்டிபயாட்டிக் பரிந்துரைப்பதில் தவறில்லை. அப்போதுதான் அந்த நோய் முழுமையாக குணமாகும்.
ஆனால் பரிந்துரைக்கப்பட்ட நாள்களுக்கு அந்த ஆன்டிபயாட்டிக்கை எடுத்துக் கொள்ளாமல், இடையில் நிறுத்திவிட்டு சிறுநீர், ரத்தம், சளிப் பரிசோதனையும் செய்யாமல் வேறு ஆன்டிபயாட்டிக்கை எடுக்க ஆரம்பிப்பது தவறு.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.