Monthly Archives: March, 2026

'ரஜினியை பற்றி பேசினால்…' – ஆதவ் இருந்த மேடையிலேயே கொந்தளித்த ரஜினி ரசிகர்

சென்னை கொளத்தூரில் தவெகவின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் தவெகவில் சமீபத்தில் இணைந்த ரஜினி ரசிகர் அசோக், ஆதவ் அர்ஜூனாவை மேடையில் வைத்துக் கொண்டே ‘ரஜினியை யாரும் தவறாக பேசினால் தட்டிக் கேட்பேன்’ எனப் பேசி பரபரப்பை கிளப்பியிருந்தார். அசோக்முன்னாள் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் அசோக் பேசுகையில், ‘எனக்கு 59 வயது. 13 வயதிலிருந்து ரஜினியை ரசித்து ரசிகராகிவிட்டேன். என் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தது ரஜினிதான். எப்படி நேர்மையாக எளிமையாக…

IPL 2026: “தோனியும், சிஎஸ்கே ரசிகர்களும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்”- சஞ்சு சாம்சன்| “I will live up to the trust that Dhoni and CSK fans have placed in me” – Sanju Samson

தோனி குறித்து பேசிய சாம்சன், “நான் தோனி பாயுடன் போனில் பேசியிருக்கிறேன். தவிர இந்திய அணியின் முகாம்களில் பார்த்திருக்கிறேன். அவரோடு ஒரே அணியில் விளையாடுவது இதுவே முதன்முறை. இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. ஐபிஎல் நடைபெறும் இரண்டு மாதங்கள் ஒரே டிரெஸிங் ரூமில் இருப்பது, அவர் எப்படி போட்டிகளுக்குத் தயாராகிறார் என்பதைக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். சஞ்சு சாம்சன்தலையாக இருப்பதற்கோ, வாலாக இருப்பதற்கோ நான் சிஎஸ்கே-விற்கு செல்லவில்லை. அங்கு ஒரே தல-தான் அது சிஎஸ்கே…

அலி லரிஜானி: ‘இரான் ஆட்சியின் தலைவரை’ கொன்றதாக கூறும் இஸ்ரேல் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, அலி லரிஜானி17 மார்ச் 2026, 10:28 GMTபுதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்இரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லரிஜானி இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.லரிஜானி கொல்லப்பட்டாரா அல்லது காயமடைந்தாரா என்பதை இரான் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இதுகுறித்த புதிய தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இந்த நிலையில் இரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டுப்படுத்திய நடவடிக்கைகளில்…

IPL 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறியது ஏன்? – மனம் திறந்த சஞ்சு சாம்சன்

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. சிஎஸ்கே அணி மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்குகிறது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காக களமிறங்க இருக்கிறார். சஞ்சு சாம்சன்இந்நிலையில் PTI- க்கு பேட்டி அளித்திருக்கும் சஞ்சு சாம்சன், “ஐபிஎலில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினேன். தற்போது முதல் முறையாக அந்த அணிக்கு எதிராக விளையாட இருக்கிறேன். அவர்களுக்கு எதிராக…

கன்னியாகுமரி: "மானம் உள்ளவர்கள் திமுக-வுக்கு ஓட்டு போடலாமா?" – ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த பொன்னார்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் கடத்தல், போதை புழக்கத்தால் இளைஞர்கள் இளம்பெண்கள் வாழ்க்கை சீரழிவை கட்டுப்படுத்த தவறியகாக, தி.மு.க அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் பேசுகையில், “இந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு இரண்டு பாலங்கள் அமைத்து தந்த பெருமை பொன்.ராதாகிருஷ்ணனைச் சேரும். …

காபூல் தாக்குதல்: "இது போர்க்குற்றம்; ரமலான் மாதத்தில் நடந்த இந்தத் தாக்குதல்.!"- ரஷீத் கான் வேதனை

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று (மார்ச். 17) பாகிஸ்தான் கொடூரத் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 250-க்கும் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு பலரும் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான், ” காபூலில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பொதுமக்களின் வீடுகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற கட்டமைப்புகளைத்…

வெள்ளிமலை: வருசநாடு மலையில் 5 பேருக்காக மட்டுமே செயல்படும் வாக்குச்சாவடி – எப்படி உள்ளது?

படக்குறிப்பு, வெள்ளிமலையில் வாக்குச்சாவடியாக செயல்படவுள்ள துரைசாமி மரகதம் அரசு உதவி பெறும் பள்ளிகட்டுரை தகவல்10 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்தேனி மாவட்டம் வருசநாடு மலைப் பகுதியில் ஐந்து வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியதன் மூலம் ஊடகங்களில் இப்பகுதி கவனம் பெற்றது.”கற்கள் மட்டுமே நிறைந்துள்ள வனப்பகுதி வழியாக வாக்குச்சாவடியை அடையவே மூன்று மணிநேரத்துக்கு மேல் தேவைப்படும்” என ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் ஜாகீர் உசேன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.அடர்ந்த வனப்பகுதியில்…

சருமத்தில் திடீரெனத் தோன்றும் சிவப்பு நிற மச்சங்கள்: ஆபத்தானவையா? அகற்ற வேண்டுமா? | Red moles that suddenly appear on the skin: Are they dangerous… Should they be removed?

நமது உடலில் உள்ள மிகச்சிறிய ரத்த நாளங்களின் (Capillaries) கசிவு அல்லது ரத்த நாளங்கள் ஒன்றோடொன்று இணையும்போது ஏற்படும் சிறிய மாற்றத்தினால்தான் (Anastomosis formation) இப்படி சிவப்பு நிறப் புள்ளிகள் உருவாகின்றன. இவை பொதுவாக உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை என்பதால், இவற்றை அகற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.ஆனாலும் சிலருக்கு இவை தோற்றத்தில் ஒருவித தொந்தரவை ஏற்படுத்தலாம். அதாவது மச்சத்தின் அளவு பெரிதாக இருந்தாலோ அல்லது பார்ப்பதற்கு உங்களுக்கு அசௌகர்யமாக இருந்தாலோ (Disturbing), விருப்பப்பட்டால் மட்டும் அவற்றை  நீக்கிக் கொள்ளலாம்.மச்சத்தின்…

எல்பிஜி நெருக்கடியை தீர்க்க மண்ணெண்ணெய் விநியோகிக்க முடிவு – முக்கிய சவால் என்ன?

இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில், இரான் மற்றும் இஸ்ரேல் – அமெரிக்கா இடையிலான போரின் தாக்கம் இப்போது மறைக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. Source link

டைனோசர்களுக்கே சவால் விட்ட 'கடல் ராஜா'- உலகத்தையே அதிரவைத்த 11 வயது சிறுமியின் கண்டுபிடிப்பு!

சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, நிலத்தில் டைனோசர்கள் ராஜாவாக வலம் வந்தபோது, கடலில் அதைவிடப் பெரிய ‘கடல் அசுரன்கள்’ வாழ்ந்து வந்தன. காலப்போக்கில் மறைந்துபோன அந்த ராட்சத உயிரினத்தைப் பற்றிய ஒரு ரகசியத்தை, இங்கிலாந்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ரூபி ரெய்னால்ட்ஸ் தற்செயலாகக் கண்டுபிடித்துள்ளார். மே 2020-ல் நிலவிய ஊரடங்கு காலத்தில், மக்கள் நடமாட்டமில்லாத கடற்கரையில் தன்னுடைய தந்தையுடன் அவர் உலாவிக் கொண்டிருந்தபோது, ஒரு பாறை இடுக்கில் தெரிந்த ஒரு பெரிய எலும்புத் துண்டுதான்…

1 10 11 12 13 14 24