Yearly Archives: 2025

BanvInd : 'ஏமாற்றிய கோலி; விடாமுயற்சியுடன் சதமடித்த கில்!' – எப்படி வென்றது இந்தியா?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களின் முதல் போட்டியில் ஆடி முடித்திருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி கொஞ்சம் தடுமாறியிருந்தாலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.Ind vs Banவங்கதேச அணிதான் டாஸை வென்றிருந்தது. முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தனர். டாஸை தோற்றதில் ரோஹித் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நாங்களே சேஸ் செய்யத்தான் நினைத்தோம் எனக் கூறி ‘துபாயில் லைட்ஸூக்கு கீழ் பேட்டுக்கு பந்து நன்றாக வரும்.’ என காரணமும் கூறினார். வங்கதேச அணி பேட்டிங்கை…

காங்கிரஸ்: செல்வப் பெருந்தகைக்கு எதிராக டெல்லியில் மாநில தலைவர்கள் புகார் – அவர் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Facebookபடக்குறிப்பு, கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்றார். கட்டுரை தகவல்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக, 15க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்கள் டெல்லியில் முற்றுகையிட்டு புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், “கட்சி விதிகளின்படி பதவிக்காலம் முடிந்த காலாவதியான தலைவர்கள் புகார் கூறுகிறார்கள். கட்சியை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி வருகிறோம்” என்று செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக்…

ஷுப்மன் கில் சதம்: வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா | சாம்பியன்ஸ் டிராபி | shubman gill century team india beats bangladesh in champions trophy

துபாய்: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இதில் இந்திய அணியின் துணை கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணி 49.4 ஓவர்களில் 228 ரன்கள் சேர்த்தது. 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா…

Champions Trophy: அர்ஷ்தீப் சிங்குக்கு பதில் ஹர்ஷித் ராணா – ரசிகர்கள் அதிருப்தி ஏன்?

15 பேர் கொண்ட அணியில் ராணா இணைக்கப்பட்டபோதே சர்வதேச போட்டிகளில் அனுபவம் வாய்ந்த முகமது சிராஜ் சிறந்த தேர்வாக இருப்பார் என ரசிகர்கள் பகிர்ந்தனர். இப்போது முன்னதாக அணியில் இருந்த வீரர்களுக்கு மாற்றாக அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.ஹர்ஷத் ராணாவுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் குரலெழுப்புகின்றனர். இன்றைய போட்டியில் 8 ஓவர்கள் வீசி, 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். Source link

Champions Trophy: முதல் ஆட்டத்திலேயே காயம்… தொடரிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் அதிரடி வீரர்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. முதல் போட்டியே நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கும், முன்னாள் சாம்பியன் நியூசிலாந்துக்கு நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் வில் யங், டாம் லதம் ஆகியோர் சதமடித்திருந்தனர்.ஃபக்கர் ஜமான்அதைத் தொடர்ந்து, 321 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48-வது ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி, இந்தத் தோல்வியால்…

சாவர்க்கர்: பிரிட்டிஷாரிடம் இருந்து தப்பிக்க பிரான்ஸில் கடலில் குதித்தபோது என்ன நடந்தது?

பட மூலாதாரம், savarkarsmarak.comபடக்குறிப்பு, விநாயக் தாமோதர் சாவர்க்கர் (கோப்பு படம்)கட்டுரை தகவல்சாவர்க்கரால் ஈர்க்கப்பட்டவரும், லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸுக்கு அடிக்கடி வருபவருமான மதன்லால் திங்ரா, 1909 ஜூலை 1ஆம் தேதி இந்திய விவகார அமைச்சரின் உதவியாளரான கர்சன் வில்லியை சுட்டுக் கொன்றார்.வில்லியின் கொலையில் சாவர்க்கரின் பங்கை பிரிட்டிஷ் அரசால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால் மதன்லாலுக்கும் சாவர்க்கருக்கும் இடையே ஆழமான நட்பு இருந்ததையும், திங்க்ரா குற்றமற்றவர் என்ற மனுவை தயாரித்தவர் சாவர்க்கரே என்பதையும் அது புரிந்துகொண்டது.மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்ரா…

“கிரிக்கெட்டை ரசித்து விளையாட விரும்புகிறேன்” – மனம் திறந்த மகேந்திர சிங் தோனி | I want to enjoy cricket Mahendra Singh Dhoni opens talk

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்று சுமார் 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கிரிக்கெட்டை அனுபவித்து, ரசித்து விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் அவர் களமாட உள்ளார். இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற மொபைல் செயலி அறிமுக நிகழ்வில் தோனி கலந்து கொண்டார். “சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2019-ல் நான் ஓய்வு…

Dhoni: 'என் வழி.. தனி வழி' – மாஸாக பஞ்ச் டயலாக் பேசிய தோனி; வைரலாகும் வீடியோ

 ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த தொடரில் சிஎஸ்கே அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கிறது. தோனி விளையாடும் கடைசி தொடர் இதுவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தோனி தமிழ் பட வசனங்களை பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.Dhoni, sanju samsonசமீபத்தில் கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனுமான…

PakvNz : 'பாபர் அசாமின் 0.25x ஆட்டம்; பௌலர்களின் சொதப்பல்' – முதல் போட்டியிலேயே தோற்ற பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கியிருக்கிறது. முதல் போட்டியிலேயே தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் மோதியிருந்தன. கராச்சியில் நடந்த இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றிருக்கிறது. சுமாரான பந்துவீச்சாலும் மந்தமான பேட்டிங்காலும் சொந்த மண்ணிலேயே முதல் போட்டியை தோல்வியோடு தொடங்கியிருக்கிறது பாகிஸ்தான்.PakvNzடாஸ் வென்ற பாகிஸ்தான்முகமது ரிஸ்வான் தான் டாஸை வென்றிருந்தார். முதலில் பௌலிங் செய்யப்போவதாக அறிவித்தார். நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. 50 ஓவர்களில் அந்த அணி 320…

அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை சங்கிலியால் பிணைத்து நாடு கடத்தும் காட்சி வெளியீடு

காணொளிக் குறிப்பு, சங்கிலி போட்டு சட்டவிரோத குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் காணொளியை வெளியிட்ட அமெரிக்காஅமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை சங்கிலியால் பிணைத்து நாடு கடத்தும் காட்சி வெளியீடு8 மணி நேரங்களுக்கு முன்னர்கையிலும் காலிலும் சங்கிலி போட்டு சட்டவிரோத குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் காட்சியை அமெரிக்காவின் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களை அமெரிக்க ராணுவ விமானத்தில் வெளியேற்றி வருகிறார். கை…

1 301 302 303 304 305 355