இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல் நடத்துவது ஏன்? யார் இந்த ட்ரூஸ் மக்கள்?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சிரியாவில் பல்வேறு மதக் குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. புதிய அரசாங்கம் பிளவுபட்ட பகுதிகளைக் கட்டுப்படுத்த முயலும் வேளையில், இன்னமும் நாட்டின் பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது.ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை, ட்ரூஸ் சிறுபான்மையைச் சேர்ந்த ஒரு வணிகர் கடத்தப்பட்ட செய்தி, தெற்கு சிரியாவில் ட்ரூஸ் போராளிகள், சுன்னி பெடோயின் போராளிகள் இடையே மோதல் ஏற்பட வித்திட்டது.பின்னர் ஜூலை 15ஆம் தேதி, ட்ரூஸ் மக்களைப் பாதுகாக்கவும் சுவெய்தாவில்…









