`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' – பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. என்ன நடந்தது?
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகில் உள்ள குர்து என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அதை தடுப்பதற்காக மண்டல போலீஸ் அதிகாரி அஞ்சனா கிருஷ்ணா சம்பவ இடத்திற்கு சென்றார். அவர் அங்கு சென்றபோது மண் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு கொண்டிருந்தது. அவர்களை அஞ்சனா கிருஷ்ணா தன்னுடன் சென்ற போலீஸார் மூலம் தடுத்து நிறுத்தினார். இதனால் கிராமத்தினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு உள்ளூர் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் வந்தனர்.…









