Daily Archives: August 14, 2025

“யாராக இருந்தாலும் சட்டத்துக்கு முன்பு சமம்" – நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

பிரபல கன்னட நடிகரான தர்ஷனின் தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் வம்பிழுத்த தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.…

இந்த நாளை மறக்க முடியுமா? – 17 வயதில் சச்சின் முதல் டெஸ்ட் சதம் விளாசி அசத்தல்! | Can you forget this day? – The day Sachin Tendulkar scored his first Test century at the age of 17

மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர், லெஜண்ட், ஜீனியஸ் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு விதந்தோதப்பட்ட உலக கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த லட்சிய கிரிக்கெட் ஆளுமையான சச்சின் டெண்டுல்கர் தனது முதல் சதத்தை ஓல்ட் டிராபர்டில் அடித்த நாள் இதுதான். 1990-ம் ஆண்டில் இதே நாளில் (ஆக.14) தனது 17 வயதில் சச்சின் டெண்டுல்கர் தன் முதல் டெஸ்ட் சதத்தை எடுத்து இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டு டெஸ்ட் போட்டியை டிரா செய்தார். பாகிஸ்தானில் 1989-ம் ஆண்டு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்…

கூலி விமர்சனம்: திரைப்படம் எப்படி உள்ளது? கதை என்ன?

பட மூலாதாரம், SunPictures14 ஆகஸ்ட் 2025, 10:47 GMTபுதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (ஆகஸ்ட் 14) வெளியாகியுள்ளது. நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் அமீர் கான் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சிக்கிட்டு வைப், மோனிகா, கூலி பவர் ஹவுஸ் என அடுத்தடுத்து பாடல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியது.இந்நிலையில் இன்று…

காமன்வெல்த் விண்ணப்பம் சமர்ப்பிக்க ஐஓஏ அனுமதி! | IOA allowed to submit Commonwealth games application

புதுடெல்லி: 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) அனுமதி வழங்கியுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அகமதாபாத்தில் போட்டியை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளை​யாட்​டுப் போட்​டிகளை நடத்​து​வதற்​கான உரிமையை பெறும் ஏலத்​துக்கு விண்​ணப்​பிப்​ப​தற்கு வரும் ஆகஸ்ட் 31 கடைசி நாளாகும். இந்​நிலை​யில் இந்​திய…

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: “காவல்துறையின் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது” – வன்னி அரசு

நிரந்தரப் பணி, தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் திட்டம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாள்களாகப் ரிப்பன் மாளிகைக்கு எதிரே போராட்டம் செய்து வந்தனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், காவல்துறை அவர்களை கலைந்துப்போகக் கூறியது. ஆனால், எங்களின் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், நேற்று இரவு காவல்துறை போராட்டக்காரர்களை கைது செய்திருக்கிறது. இதற்கு பல்வேறு அரசியல் தரப்பிலிருந்து கண்டனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.வன்னி அரசு – VCKவிடுதலைச் சிறுத்தைகள்…

34 வருடங்களுக்கு பிறகு தொடரை வென்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி சாதனை! | west indies record odi seires victory after 34 years

டிரினிடாட்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி தொடரை 2-1 என கைப்பற்றி சாதனை படைத்தது. டிரினிடாட்டில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. தனது 19-வது சதத்தை அடித்த கேப்டன் ஷாய் ஹோப்…

கடல் அலையில் மின்சாரம் – வணிக ரீதி வெற்றிக்கு 2 பெரிய தடைகள் என்ன?

பட மூலாதாரம், Eric Yang/Getty Imagesகட்டுரை தகவல்நீங்கள் எப்போதாவது கடல் அலையால் தாக்கப்பட்டிருந்தால், அதில் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்திருப்பீர்கள்.கர்ஜிக்கும் கடலின் கீழ், இன்னும் முழுமையாக பயன்படுத்தப்படாத ஒரு சக்தி இருக்கிறது. அது சுத்தமான (மாசு இல்லாத) ஆற்றலின் எதிர்காலத்தை மாற்றும் திறன் கொண்டது.ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக கடல் அலைகளில் இருந்து கிடைக்கும் சக்தியைப் பயன்படுத்த முயற்சித்து வருகிறார்கள். ஆனால் கடலின் கடுமையான சூழலும், அதற்கு ஆகும் அதிக செலவுகளும் அதனைச் செயல்படுத்தத் தடையாக உள்ளன.இப்போது…

ஆஸி. மண்ணில் அதிகபட்ச டி20 ஸ்கோர்: ருதுராஜ் சாதனையை முறியடித்த பிரேவிஸ்! | Highest T20 score on Australian soil: Brevis breaks Ruturaj record

டார்வின்: ஆஸ்திரேலியாவின் டார்வினில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 53 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் எழுச்சியுறும் நட்சத்திரம், சிஎஸ்கே அணிக்கு ஆடும் டேவால்ட் பிரேவிஸ் 8 சிக்சர்கள் 12 பவுண்டரிகளுடன் 56 பந்துகளில் 125 ரன்களை விளாசி வெற்றி நாயகனாகத் திகழ்ந்தார். இந்தப் போட்டியின் சில சாதனைத் துளிகள்: தென் ஆப்பிரிக்கா இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தென்…

sanitary workers strike; கைவிரித்த சேகர் பாபு; அமைதியான முறையில் போராடிவந்த தூய்மைப் பணியாளர்களை கைது செய்து போலீஸ்!

தனியார் மயமாக்கலை எதிர்த்தும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக இன்றும் காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.மறுபக்கம், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், மக்கள் சிரமத்துக்குள்ளாவதாகவும் தாக்கல் செய்யப்பட பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், போராட்டக்காரர்கள் களைந்து செல்லுமாறும், காவல்துறை போராட்டக்காரர்களை சட்டத்திற்குட்பட்டு முறையாகக் கைது செய்யுமாறும் உத்தரவிட்டது.தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்அதற்கேற்றாற்போல,…

ஈஷா கிராமோத்சவம் ! பத்திரிக்கையாளர் சந்திப்பு !

30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்க உள்ளனர். சத்குருவால் தொடங்கப்பட்ட ‘ஈஷா கிராமோத்சவம்’, பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டு திருவிழாவாக உருவெடுத்துள்ளது. இவ்விளையாட்டு திருவிழாவின் 17-ஆவது பதிப்பாக “ஈஷா கிராமோத்சவம்-2025” ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் 30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்க உள்ளனர்இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (06/08/25) நடைபெற்றது. இதில் ஈஷா தன்னார்வலரும், பிரபல எழுத்தாளருமான கலைமாமணி…