பஞ்சாப் கிங்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ஆனார் ரிக்கி பான்டிங்! | Ricky Ponting appointed head coach of Punjab Kings ahead of IPL 2025
மும்பை: ஐபிஎல் 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் 7 ஆண்டுகள் பயணித்த பிறகு இப்போது பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது. இவர் இரண்டு ஆண்டு காலத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. மற்ற பயிற்சியாளர்களை ரிக்கி பான்டிங்கிடம் கலந்தாலோசித்து பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவெடுக்கும். பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ட்ரிவர் பெய்லிஸ்…









