`90 கிலோ கெட்டுப்போன இறைச்சி; 50 கிலோ அழுகிய பழங்கள்’ – திருச்சி உணவகங்களில் நடந்த ஆய்வில் பகீர் | Rotten cooked foods found in trichy hotels during raid
நாமக்கல் பரமத்தி சாலையிலுள்ள உணவகம் ஒன்றில் ஷவர்மா வாங்கிச் சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே உணவகத்தில் உணவு வாங்கிச் சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்டோரும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. அதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் விற்பனைக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.ஆய்வின்போதுஇந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறது. தமிழகம் முழுவதும் உணவகங்களுக்குச் சென்று, அங்குள்ள உணவுகளின் தரத்தை…






